புதுடெல்லி: பைஜூஸ் நிறுவனத்தை நடத்தி வரும் திங்க் அண்ட் லேர்ன் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் அதன் நிறுவனர் பைஜூ ரவீந்திரனும் பெமாவின் விதிகளை மீறி வருவாயைக் காட்டத் தவறிவிட்டதாகவும் புகார் எழுந்தது. மேலும் பைஜூ ரவீந்திரன் மீது பெமா விதிகளின் மீறல்கள் தொடர்பாக 9,362.35 கோடி ரூபாய்க்கு அமலாக்கத்துறை புகார் பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், பைஜூ ரவீந்திரன் மற்றும் அவரது நிறுவனம் சம்பந்தப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. இதை தொடர்ந்து பைஜூ ரவீந்திரனுக்கு அமலாக்கத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.