கேப் டவுன்: இந்திய அணியுடன் கேப் டவுனில் நடக்க உள்ள 2வது டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்ரிக்க அணியின் கேப்டனாக டீன் எல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக கேப்டன் தெம்பா பவுமா 2வது டெஸ்டில் இருந்து விலகியதை அடுத்து, இந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ள டீன் எல்கரை கவுரவிக்கும் விதமாக அவருக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. செஞ்சுரியனில் நடந்த முதல் டெஸ்டில் எல்கர் 185 ரன் விளாசி ஆட்ட நாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்ரிக்க அணியில் பவுமாவுக்கு பதிலாக ஜுபேர் ஹம்சா சேர்க்கப்பட்டுள்ளார்.