Friday, May 10, 2024
Home » மின்சார ரயில்கள் ரத்தால் தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்

மின்சார ரயில்கள் ரத்தால் தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்

by Arun Kumar


சென்னை: மின்சார ரயில்கள் ரத்தால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் அலோமோதுகிறது. மக்கள் கூட்டத்தை கட்டுபடுத்த தாம்பரம் – கடற்கரை வழித்தடத்தில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 150 கூடுதல் பேருந்துகள் இயக்கபட்டு வருகிறது.

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. தாம்பரம்- செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் 15 ரயில்களும் கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. கடற்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் ஒரு ரயிலும், தாம்பரத்தில் இருந்து கடற்கரை செல்லும் 15 ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் 5 ரயில்களும், காஞ்சிபுரத்தில் இருந்து கடற்கரை செல்லும் ஒரு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமால்பூரில் இருந்து கடற்கரை செல்லும் ஒரு ரயில் ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

18.02.2024 அன்று தென்னக இரயில்வேயின் பராமரிப்பு பணிகள் காரணமாக, மா.போ.கழகம் காலை 10.00 மணி முதல் மாலை 15.15 மணி வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும்

பேருந்து எண் 18A பிராட்வேயில் இருந்து புறப்பட்டு அண்ணாசாலை வழியாக 60 பேருந்துகள் தாம்பரம் வந்தடையும். பேருந்து எண் 18G பிராட்வேயில் இருந்து புறப்பட்டு தி.நகர், எழும்பூர் வழியாக 20 பேருந்துகள் தாம்பரம் வந்தடையும். பேருந்து எண் 18ACT கிண்டி பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை செல்வதற்கு 10 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்து எண் B18 கொருக்குப்பேட்டையில் இருந்து தாம்பரம் வரை செல்வதற்கு 30 பேருந்துகள் இயக்கம். பேருந்து எண் E18 பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரி வரை செல்வதற்கு 20 பேருந்துகளும், பேருந்து எண் G18 தியாகராயர் நகர் பேருந்து நிலயத்தில் கூடுவாஞ்சேரி செல்ல 10 பேருந்துகளுடன் மொத்தம் 150 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

You may also like

Leave a Comment

3 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi