டெல்லி: தேர்தல் முடியும் வரை காங்கிரசிடம் இருந்து ரூ .3,500 கோடி நிலுவைத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கை கிடையாது என உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உறுதியளித்துள்ளார். காங்கிரஸ் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி நாகரத்தினா, ஏ.ஜி. மாசி அடங்கிய அமர்வில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஒருவர் குறித்து எப்போதும் எதிர்மறையான எண்ணத்தை கொண்டிருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.