நீலகிரி: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நீலகிரி அதிமுக மற்றும் பாஜக மாவட்டச் செயலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக மாவட்டச் செயலாளர் கப்பச்சி வினோத் உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் மீது 4 வழக்குகளும், பாஜக மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு கட்சியினரும் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு. மேலும் தேர்தல் பரப்புரை ஊர்வலம் செல்ல அனுமதிக்கவில்லை எனக் கூறி காவல்துறையினரின் தடுப்பை மீறி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வாகனத்தையும் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நீலகிரி அதிமுக மற்றும் பாஜக மாவட்டச் செயலாளர்கள் மீது வழக்குப்பதிவு!
previous post