Saturday, July 27, 2024
Home » ஏலகிரி மலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

ஏலகிரி மலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

by Lakshmipathi

*விடுமுறையில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்

ஏலகிரி : விடுமுறை தினமான நேற்று, ஏலகிரி மலையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் திரண்டனர். குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலை தமிழ்நாட்டின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளன. இதனால் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.

இங்குள்ள அரசு சுற்றுலா தலங்களான படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா ஆகியன சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவர்ந்து வருகிறது. எனவே, விடுமுறை நாட்களில் ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள தங்கும் விடுதிகளில் தங்கி, அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு பொழுதுப்போக்கி செல்கின்றனர். இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏலகிரி மலையை சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டிருந்தனர். அங்குள்ள படகு இல்லங்களில் வரிசைகளில் நின்று பின்னர் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் படகு சவாரி செய்தனர்.

மேலும், நிலாவூர் பண்டேரா பார்க்கில் அரிய வகை வெளிநாடு பறவைகளுக்கு உணவு கொடுத்தும், புகைப்படங்கள் எடுத்தும், பறவைகளோடு விளையாடி செல்பி எடுத்தும் கொண்டனர். இதுதவிர அங்குள்ள விதவிதமான உருவ பொம்மைகள் அருகில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

You may also like

Leave a Comment

17 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi