நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், கடந்த 3 நாட்களாக முட்டை விலை 435 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று மேலும் 5 காசுகளை என்இசிசி உயர்த்தியுள்ளது. இதன்படி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 440 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை உயர்ந்துள்ளதால், நாமக்கல் மண்டலத்தில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.