நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த 2 நாளாக 400 காசுகளாக இருந்தது. இந்நிலையில், நேற்று என்இசிசி மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ், முட்டை விலையில் 10 காசுகள் உயர்த்தினார். இதையடுத்து, முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, 410 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்கிடையில், என்இசிசி விலையில் இருந்து 40 காசுகள் மட்டும் குறைத்து, பண்ணையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும். அதற்கு மேல் மைனஸ் விலை அதிகரிக்க வேண்டாமென என்இசிசி, பண்ணையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.