சென்னை: பண்ருட்டி ராமச்சந்திரன் செல்லும் கட்சி அதோடு முடிந்து விடும் என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கிளைச் செயலாளருக்கு உள்ள தகுதிகூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இல்லை; பண்ருட்டி ராமச்சந்திரன் நிழல் கூட அவர்கூட வரவில்லை. காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்தது போல் ஓ.பி.எஸ். புகுந்துள்ளார். டி.டி.வி.தினகரன் கூடாரம் ஏற்கனவே காலியாகிவிட்டது. யமான், மண் குதிரை ஒன்று சேர்ந்துள்ளதாக ஓ.பி.எஸ்., டி.டி.வி. இணைந்தது குறித்தும் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.