சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் எஃப்.ஐ.ஆர். கேட்டு அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கின் எப்ஐஆர் கேட்டு அமலாக்கத் துறை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தது. இலுப்பூர் அருகே சௌராஷ்ட்ரா தெருவில் உள்ள விஜயபாஸ்கரின் இல்லத்தில் நேற்றுமுன்தினம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.