போர்ட் மோர்ஸ்பி: ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள பப்புவா நியூகினியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த பப்புவா நியூகினியா தீவில் இன்று மதியம் 2:36 மணிக்கு 6.1 அளவிலான ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கிழக்கு இந்தோனேஷியா மற்றும் சாலமன் தீவுகள் போன்ற பல குழுக்களை உள்ளடக்கிய ஆஸ்திரேலிய மண்டலத்தின் ஒரு பகுதியாக பப்புவா நியூகினியா உள்ளது. இன்று மதியம் 2:36 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. மேலும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
மேலும் பப்புவா நியூகினியா தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்படும் மண்டத்தில் உள்ள ஒன்றாகும். ஆனால் இந்த தீவில் மக்கள் தொகை குறைவு என்பதால் பாதிப்பு ஏதும் அதிக அளவு உணரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.