Thursday, May 23, 2024
Home » இமாச்சலப்பிரதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவு

இமாச்சலப்பிரதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவு

by Neethimaan

சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தின் மண்டியில் இன்று காலை 6.56 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. உலகின் பல்வேறு நகரங்களில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் போன்ற இயற்கை பேரிடர்கள் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளன. இமாச்சலப்பிரதேசத்தின் மண்டியில் இன்று காலை 6.56 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவாகியுள்ளது

நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

five × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi