இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பிராந்தியத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 2.20 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது. அங்கு உள்ள பல்வேறு நகரங்களில் பூமி குலுங்கியது. இது ரிக்டரில் 6.1 என பதிவாகியிருந்தது என அந்த நாட்டின் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. இதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணத்திலும் உணரப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. அதே போல் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. தலைநகர் டெல்லியின் பல பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வௌியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.