நாகை: துவாரகா விரைவு நெடுஞ்சாலை திட்டம் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.18 கோடியாக இருந்த செலவு ரூ.250 கோடியாக உயர்த்தி ஊழல் ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் 600 சுங்கச்சாவடிகளில் 5 சுங்கச்சாவடிகளில் மட்டும் சிஏஜி ஆய்வு செய்ததில் ரூ.132 கோடி ஊழல் அம்பலமாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஆய்வு நடத்தினால் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தெரிய வரும் என்று சிஏஜி தெரிவித்துள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.