சென்னை: தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தற்போது வெப்பநிலை அதிகரித்து வரும்நிலையில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும். காலை நேரங்களில் பனி மூட்டம் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருமழை முடிவுக்கு வந்துள்ள நிலையில், தற்போது வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தஞ்சாவூர், கோவை, கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருச்சி, திருப்பத்தூர், சென்னை, கன்னியாகுமரி, தர்மபுரி, திண்டுக்கல்,மதுரை, திருநெல்வேலி, சேலம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகம், புதுவையில் வறண்ட வானிலை நிலவும் என்றும் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். இதேநிலை 27ம் தேதி வரை நீடிக்கும்.