சென்னை: குஜராத் துறைமுகம் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவது குறித்து எடப்பாடி பழனிசாமி அரைவேக்காடுத்தனமாக பேசுகிறார் என்று அண்ணாமலை கூறினார். தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு முதல்வர் சரித்திர புத்தகத்தை சரியாக படிக்க வேண்டும். அவர் என் மீது கிரிமினல் அவதூறு வழக்கு போட்டு உள்ளார். சென்னையில் உள்ள குடோனில் நடத்திய சோதனைகளில், லேப்பாக இருக்க கூடும் என்ற சந்தேகம் உள்ளது. எங்கள் சந்தேகங்களுக்கு விடை கிடைத்து கொண்டு இருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதுவும் தெரியாமல் பேசுவது ஆச்சரியம் மட்டுமல்ல, வருத்தம் அளிப்பதாகவும் உள்ளது. நாகாலாந்து, இமாச்சல் பிரதேசம், குஜராத் போன்ற பகுதிகளில் முந்தரா துறைமுகத்தில், போதைப் பொருட்களை பெருமளவு பிடித்து இருப்பதற்கு, பாராட்டு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், எடப்பாடி பழனிசாமி அரைவேக்காடுத்தனமாக பதில் சொல்ல கூடாது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.