சென்னை: மூன்றாண்டு முடிந்து 4-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ‘திராவிட மாடல் அரசாம் தி.மு.க. ஆட்சிக்கு கி. வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். தி.மு.க. அரசின் இந்த மூன்றாண்டு ஆட்சியில் மக்கள் மனங்களில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. பல்வேறு செயல் திட்டங்களால் தி.மு.க. அரசு தனது சாதனைகளை தொடர்ந்து செய்து வருகிறது. 27 தொழிற்சாலைகளை திறந்து வைத்து 74,757 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1 கோடியே 15 லட்சம் மகளிர் மாதந்தோறும் ரூ.1,000 பெறுகின்றனர் எனவும் கூறியுள்ளார்.