தேனி: ஆண்டிபட்டி உப்புத்துறையில் போதையில் தினமும் தகராறுசெய்த கணவனைகொன்று நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். விவசாயி ராஜா தன்னைத்தானே வெட்டிக்கொன்று இறந்ததாக பொய் கூறிய அவரது மனைவி ஜெயா கைது செய்யப்பட்டார். தினமும் குடித்து விட்டு தகராறு செய்து வந்ததால் ராஜாவை அரிவாளால் வெட்டிக்கொன்றதாக மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.