சென்னை: வரதட்சனை கொடுமை புகார் பதிவு குறித்து தமிழ்நாடு டிஜிபிக்கு அரசு வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார். புகார்களை பதிவு செய்யும்போது முதல் தகவல் அறிக்கையில் கணவர் குடும்பத்தினர் பெயர்களை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். வழக்குகளில் தேவையின்றி போலீஸ் கைது செய்யக்கூடாது; அதனை நீதிபதிகள் அங்கீகரிக்கக்கூடாது என்று அசன் முகமது ஜின்னா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.