சென்னை: மோக்கா புயல் காரணமாக தெற்கு அந்தமான் கடல்பகுதிக்கு மே 14 வரை செல்ல வேண்டாம் என பேரிடர் மேலாண்மை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். மீனவர்கள், படகுகள் வங்காள விரிகுடா கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம். ஏற்கனவே கடலுக்கு சென்றுள்ள மீன்பிடி படகுகள் விரைவாக கரை திரும்பவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.