சென்னை: திமுக சட்டத்துறை மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் தேர்வுக்கு நாளை மறுநாள் சென்னையில் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ வெளியிட்ட அறிக்கை: கழகத் தலைவரின் அறிவுரைக்கிணங்க, திமுக சட்டத்துறை மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் தேர்வுக்கான நேர்காணல் வரும் 20ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடைபெறும்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு காலை 9 மணிக்கும், திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்டங்களுக்கு மாலை 4 மணிக்கும் நடைபெறும். ஏற்கனவே சட்டத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தலைமை கழகத்திலோ அல்லது மாவட்ட கழக அலுவலகத்திலோ சமர்பித்தவர்கள் மட்டுமே இந்த நேர்காணலில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.