சென்னை: செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்வதற்கான எந்த ஆதாரத்தையும் அமலாக்கத்துறை வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். செந்தில் பாலாஜி கைது தொடர்பான முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகளிடம் திமுக வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.