சென்னை: மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுகவுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவுடன் ஆலோசனை நடத்த த.வா.க. தலைவர் வேல்முருகன் அறிவாலயம் வருகை தந்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் திமுக நிர்வாகிகளுடன் சந்தித்து வருகிறார். மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என வேல்முருகன் கேட்டிருந்த நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.