அரக்கோணம் : அரக்கோணம் நகர்மன்ற கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் மனு பெறுவதற்கு தங்களை அழைக்கவில்லை என அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர். அதிமுக ஆட்சியில் 10 ஆண்டாக அரக்கோணத்தில் எந்த வளர்ச்சிப்பணியும் நடக்கவில்லை என திமுக கவுன்சிலர்கள் தெரிவித்தனர். கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம் காரணமாக நகர்மன்ற கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டது.