சென்னை: திமுக ஆதிதிராவிட நலக்குழு மாநில செயலாளரும், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினருமான ஆ.கிருஷ்ணசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில நிர்வாகிகள் கூட்டம் வருகின்ற 23ம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. எனவே திமுக ஆதிதிராவிடர் நலக்குழுவை சேர்ந்த மாநில நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.