Tuesday, May 21, 2024
Home » திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து பிரசாரம் பெண்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்

திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து பிரசாரம் பெண்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்

by Lakshmipathi

*அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, ெதாகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும், திமுக வேட்பாளரை ஆதரித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே,கம்பன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், தேவராஜ், அ.நல்லத்தம்பி ஆகியோரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கலசபாக்கம் மற்றும் புதுப்பாளையம் ஒன்றியங்களில் எறையூர், புதுப்பளையம், காஞ்சி, மெல்சோழங்குப்பம், ஆதமங்கலம், கலசபாக்கம், லாடவரம், பாடகம் உள்ளிட்ட கிராமங்களில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:

திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திவரும் திட்டங்களால், ஒவ்வொரு குடும்பமும் நேரடியாக பயனடைந்திருக்கின்றன. பெண்களின் முன்னேற்றத்துக்காக நடைபெறுகிற ஆட்சி இது. காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத்தொகை, பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் பயணம் போன்ற திட்டங்களால் மக்களின் உள்ளங்களில் முதல்வர் நிரந்தர இடம் பிடித்திருக்கிறார்.

மகளிர் உரிமைத்தொகையாக மாதந்தோறும் ரூ.1,000யை மாநிலம் முழுவதும் 1.15 கோடி பெண்கள் தங்களுடைய வங்கிக்கணக்கு மூலம் பெறுகின்றனர். அதனால், பெண்கள் எல்லாம் பொருளாதார தன்னம்பிக்கையை பெற்றுள்ளனர். பெண்கள் எப்போதும் நன்றி உணர்ச்சிமிக்கவர்கள். அதனை, வாக்கு எண்ணிக்கை நடைெபறும் ஜூன் 4ம் தேதி நாம் தெரிந்து கொள்ளலாம்.

பெண்கள் படிக்க வேண்டும் என்று தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் கனவு கண்டனர். அவர்களின் கனவை நிறைவேற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுமைப் பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 வழங்குகிறார். அதன்மூலம், தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி பெறும் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

கடந்த 2 ஆண்டு திமுக ஆட்சியில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏராளமான திட்டங்கள் நிறைவேறியிருக்கிறது. குறிப்பாக, கலசபாக்கம் தொகுதியில், செய்யாறின் குறுக்கே 4 இடங்களில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்படுகிறது.

அதேபோல், படவேடு பகுதியில் அரசு மருத்துவமனை தொடங்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.எனவே, இந்த சாதனைகள் இன்னும் அதிகமாக தொடர்ந்திட, திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு உயதசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், ஒன்றியக்குழு தலைவர்கள் சுந்தரபாண்டியன், அன்பரசி ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், சுப்பிரமணி, ஆறுமுகம் மற்றும் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

seven + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi