சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு ஒப்பந்தமானது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட அதே தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் களமிறங்குகிறது எனது குறிப்பிடத்தக்கது.