சென்னை : தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது சமூக வலைதள பக்கத்தில்,”தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், சிறந்த திரைக்கலைஞரும், எங்கள் மதுரை மண்ணின் மைந்தருமான திரு. விஜயகாந்த் அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது. திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்களாலும் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்ட திரு.விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் – தொண்டர்களுக்கும் – இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.