மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம்அறிவித்துள்ளது. நவம்பர் 5,12,19,26ல் நாகர்கோவிலில் மாலை4.35க்கு புறப்பட்டு மறுநாள் காலை4.10க்கு தாம்பரம் செல்லும் எனவும் நவ.6,13, 20, 27ல் தாம்பரத்தில் காலை 8.05க்கு புறப்படும் ரயில் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.