Sunday, May 12, 2024
Home » தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நடப்பாண்டு ரூ.1 கோடிக்கு இலக்கு நிர்ணயம்

தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நடப்பாண்டு ரூ.1 கோடிக்கு இலக்கு நிர்ணயம்

by Lakshmipathi

*மாவட்ட கலெக்டர் அருணா தகவல்

ஊட்டி : ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி-2023 முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி சேரிங்கிராஸ், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி-2023 சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கி நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்து தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்து ஜவுளி ரகங்களை பார்வையிட்டார்.

தொடர்ந்து, முதல் விற்பனையை துவக்கி வைத்த கலெக்டர் கூறியதாவது: தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89 வருடங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் சந்தைப்படுத்தி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பினை நல்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறது.

இந்த நிறுவனம் பாரம்பரியமிக்க பட்டு ரகங்களான காஞ்சிபுரம், ஆரணி, சேலம், கோவை மென்பட்டு, திருபுவனம், ராசிபுரம் முதலிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுசேலைகளை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் காலத்திற்கேற்ப புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத சிறப்பு தள்ளுபடியை அரசு வழங்குகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு மற்றும் பருத்தி சேலைகள், இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் ேசலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், திரைசீலைகள், ரெடிமேட் சட்டைகள், சுடிதார் ரகங்கள், குர்தீஸ் வகைகள், பலதரப்பட்ட நவீன பைகள், குல்ட் ரகங்கள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் ரகங்கள் என ஏராளமான ஜவுளி ரகங்கள் தருவிக்கப்பட்டுள்ளன. அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வட்டியில்லாத சுலப தவணையின் மூலம் கடன் விற்பனை உண்டு. கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டத்தின் மூலம் அதிக வாடிக்கையாளர் பயன்பெறும் வகையில் ரூ.300 முதல் ரூ.3000 வரை மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் இணையும் வசதியும் உள்ளது.

இத்திட்டத்தில் 11 மாத தவணைகளை வாடிக்கையாளர்கள் செலுத்தும் 12வது மாத முடிவில் மொத்த தொகைக்கும் வாடிக்கையாளர்கள் தள்ளுபடி விலையில் துணிகளை எடுத்து கொள்ளலாம். தீபாவளியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு நடப்பாண்டு ரூ.1 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார். இந்நிகழ்ச்சியில் முதுநிலை மண்டல மேலாளர் நந்தகோபால், ஊட்டி ஆர்டிஒ., மகாராஜ், ேமலாளர் ஜெகநாதன், ஆய்வாளர் முருகன், ஊட்டி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் ஷபீனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

2 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi