மதுரை: ஆக்கிரமிப்பை அகற்றும் விவகாரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது குற்ற நடவடிக்கை எடுத்த ஆட்சியரின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்று ஐகோர்ட் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றிய விவகாரத்தில் வருவாய் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.