சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்கள். செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என நீதிபதி நிஷா பானுவும், விசாரணைக்கு ஏற்றதல்ல நீதிபதி பரத சக்கரவர்த்தியும் தீர்ப்பு வழங்கினார். நீதிமன்ற காவலில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க நீதிபதி நிஷா பானு உத்தரவிட்டார். ஆட்கொணர்வு வழக்கு 3-வது நீதிபதி விசாரணைக்காக தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.