சென்னை: நேரடி தேர்வில் விலக்கு கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2,222 பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் நேரடி தேர்வில் இருந்து 400 பேருக்கு விலக்கு கோரிய வழக்கில் ஆணையிடப்பட்டுள்ளது. 400 பணியிடங்களை காலியாக வைக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.10க்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது. 2013ல் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 400 பேரை போட்டித் தேர்வின்றி நோடியாக நியமிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.