திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உலகம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் 4 சுற்றுகள் முடிவில் காளைகள் முட்டியதில் 5 பேர் காயமடைந்துள்ளனர். திண்டுக்கல் அருகே உலகம்பட்டியில் புனித பெரிய அந்தோணியார் கோவில் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகளும் 430 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.