டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய போலி வீடியோ வழக்கில் பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் நீதிமன்றத்தில் திங்கள்கிழமைக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக பிரசாந்த் உம்ராவ் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன் மீது தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க கோரியும் எப்.ஐ.ஆரை ரத்துசெய்யக் கோரியும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.