தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் வீட்டில் துணி காயவைக்கும் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி 3 பேர் பலியாகினர். அறுந்து கீழே விழுந்த துணி காயவைக்கும் கம்பியை தெரியாமல் மிதித்த மாதம்மாள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மின்சாரம் தாக்கிய மாதம்மாளை காப்பாற்ற முயன்ற பெருமாள், சரோஜா ஆகியோரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.