சென்னை: தன் மீதான அவதூறு வழக்கை ரத்துசெய்யக் கோரி முன்னாள் டி.ஜி.பி. நட்ராஜ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவசர வழக்காக விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு அவர் முறையீடு செய்தார். விசாரணையின் போது, வழக்கு திருச்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அது தொடர்பாக மதுரை கிளையில் மனு தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தினார்.