சென்னை: பத்திரப்பதிவுத்துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த, ஊழல்நடக்காமல் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். பத்திரப்பதிவு அலுவலகங்களில் இடைத்தரகர் செயல்பாடு கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இடைத்தரகர் செயல்பாடுகளை கண்காணிக்க தவறிய சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.