சென்னை: டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். கேரளாவில் எலி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி வளாகங்களில் கொசு உற்பத்தியை தடுக்க ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.