குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் முனீஸ்வரன் மற்றும் காவல் தெய்வங்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களிலும், விசேஷ நாட்களிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இன்று காலை கிராம மக்கள் காளியம்மன் கோயிலுக்கு சென்றபோது, அங்கு முனீஸ்வரன் சிலையின் கால், கைகள் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையிலான இந்து முன்னணி நிர்வாகிகள் அங்கு வந்தனர். இதுகுறித்து இந்து முன்னணி நிர்வாகிகள் பரதராமி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், முனீஸ்வரன் சிலையை உடைத்தவர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.