டெல்லி: மத்தியப் பிரதேசம் சாகர் மாவட்டத்தில் 10 பட்டியலின மக்களின் வீடுகள் முன்னிறிவிப்பின்றி இடிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் குற்றசாட்டு வைத்துள்ளனர். பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளும் இடிக்கப்பட்டுள்ளன. தகவல் தெரிவிக்காமல் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளதால் தங்குவதற்கு இடமின்றி மக்கள் தவித்து வருகின்றனர் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.