தஞ்சை: டெல்டா மாவட்டங்களில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடக்கும் நிலையில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் கோட்டத்தில் இருந்து அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. கர்நாடக அரசை கண்டித்து காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.