டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு சதித்திட்டமே பாஜகவால் தான் தீட்டப்பட்டது என்று சஞ்சய் சிங் எம்.பி. பரபரப்பு புகார் அளித்துள்ளார். டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், பாஜக மீது குற்றம்சாட்டியுள்ளார். பாஜக மூத்த தலைவர்கள் பலரும் மதுபானக் கொள்கை முறைகேடு சதியில் சம்பந்தப்பட்டுள்ளதாக சஞ்சய் சிங் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்ய தீட்டப்பட்ட சதியை அம்பலப்படுத்தப் போவதாகவும் சஞ்சய் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.