டெல்லி : பாஜகவின் குதிரை பேரத்தை தடுக்கவே டெல்லி சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் கொண்டுவந்ததாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார். பொய் வழக்குகள் பதிவு செய்து மாநிலங்களில் கட்சிகளை உடைத்து பாஜக ஆட்சியை கவிழ்த்து வருகிறது என்று கூறிய அவர், டெல்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கு 62 இடங்களும், பாஜகவுக்கு 8 இடங்களும் உள்ளன என்றும் தனிப்பெரும்பான்மையுடன் கெஜ்ரிவால் ஆட்சி நடத்தி வரும் நிலையில் ஆட்சியை கவிழ்க்க பாஜக கடும் முயற்சி என புகார் தெரிவித்துள்ளார்.