டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை எதிர்த்து ஆம் ஆத்மி வழக்கு தொடர்ந்துள்ளது. கைது நடவடிக்கைக்கு எதிராக இடைக்கால நிவாரணம் வழங்க வழக்கை முன்கூட்டியே விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோர்ட் தெரிவித்துள்ளது.