டெல்லி: டெல்லியில் ஒரே நாளில் 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில் தொடர் சம்பவங்கள் குறித்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நேற்றிரவு பெண் ஒருவர் மர்மநபர்களால் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மாளவியா நகர் அருகே கல்லூரி மாணவி இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.