டெல்லி: பாதுகாப்புத்துறைக்கு ரூ.11.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் செயல்பாடுகளால் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். அனைத்து மக்களுக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சியே குறிக்கோள். மக்களுக்கு சாதகமான திட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட்டன என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.