Saturday, July 27, 2024
Home » பாசிச பாஜவை தோற்கடிங்க..! திமுக கூட்டணியை வெற்றி பெற செய்யுங்க, ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் பேட்டி

பாசிச பாஜவை தோற்கடிங்க..! திமுக கூட்டணியை வெற்றி பெற செய்யுங்க, ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் பேட்டி

by Ranjith

நாடாளுமன்ற தேர்தலில் பாசிச பாஜவை தமிழக மக்கள் தோற்கடிக்க வேண்டும் என ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:  தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் நடுநிலையாக தெரியவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக பேசுபவர்கள், பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் குடிமை சமூகங்கள் போன்ற அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்காக மக்களால் மக்களே நடத்தும் அரசு என்பதற்கு பதிலாக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு என கார்ப்பரேட்டுகளால் கார்ப்பரேட்டுகளே நடத்தும் அரசாக ஒன்றிய அரசு மாறிவிட்டது. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவை எதிர்க்கட்சிகளை நசுக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மாநில முதல்வர்கள் கைது செய்யப்படுவதோடு பாஜவில் இணைபவர்கள் உடனடியாக குற்றங்களில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் மூன்றாண்டுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி காட்டி இருக்கிறார்.

ஆனால் 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம், அனைவரது வங்கியிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறிய பொய் பிரசாரம் என இதை மட்டுமே செய்திருக்கிறார். எனவே தமிழகத்தில் பாசிச பாஜவை தோற்கடித்து திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* புல்லட் ரயிலுக்கு ரூ.1.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யும் ஒன்றிய அரசு தமிழகத்தில் மெட்ரோ ரயிலுக்கு நிதி ஒதுக்காதது ஏன்?

* மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு அமல்படுத்தும் ஒன்றிய அரசு தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளை அமைக்க முயற்சி கூட எடுக்காதது ஏன்?

* ரூ.643 கோடி சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கீடு செய்து, தமிழுடன் 5 மொழிக்கு சேர்த்து ரூ.29 கோடி தான் கொடுக்கப்பட்டுள்ளது என நீதிபதி அரிபரந்தாமன் கூறினார்.

You may also like

Leave a Comment

13 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi