சுல்தான்பூர்: பெங்களூருவில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் தெரிவித்ததாக கூறி உபி மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்பி, எம்எல்ஏ நீதிமன்றத்தில் பா.ஜ தலைவர் விஜய்மிஸ்ரா வழக்கு தொடர்ந்தார். நேற்று நடந்த வழக்கு விசாரணையின் போது, எம்பி, எம்எல்ஏ வழக்குகளை விசாரித்த நீதிமன்ற நீதிபதி யோகேஷ் யாதவ் டிசம்பர் 16ம் தேதி நேரில் ஆஜராகும்படி ராகுல்காந்திக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.