Tuesday, May 14, 2024
Home » தீபம் ஏற்றும் முறையும் அதன் பலன்களும்!

தீபம் ஏற்றும் முறையும் அதன் பலன்களும்!

by Nithya

நாம் நாள்தோறும் காலை மற்றும் மாலை இருவேளையும் பூஜை அறையில் தீபம் ஏற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். தீபங்கள் ஏற்றுவதால் ஏற்படும் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

*தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் நன்மதிப்பும் கிடைக்கும்.

*மேற்குத் திசையில் உள்ள முகத்தை ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும், கடன் தொல்லைகள் விலகும்.

*சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும். தென் திசையில் ஒருபோதும் விளக்கு ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.

*ஒவ்வொரு திசைக்கும் பலன்கள் என்பது போல் எந்த திரி வகையினை பயன்படுத்தினால், குறிப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

*சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டது பஞ்சுத்திரி.

*முற்பிறவியின் பாவங்களை அகற்றி செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள தாமரைத் தண்டு திரியில் விளக்கேற்றலாம்.

*மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி பயன்படுத்தலாம்.

*செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத்திரி. முழுமுதற் கடவுளான கணேசப்பெருமானுக்கும் உகந்தது.

* தம்பதிகள் மனமொத்து வாழவும் – மகப்பேறு பெறவும் மஞ்சள் நிறங்கொண்ட புதிய திரிபோட்டு விளக்கேற்ற வேண்டும்.

*திரியுடன்எண்ணையிட்டால் தானே தீபம் எரியும்? அதற்கான பலன்களையும் பார்க்கலாம். நாம் விளக்கேற்றும்போது அதில் விடும் எண்ணையினால் பலன்கள் நேரெதிராகவும் மாற வாய்ப்புண்டு. இருக்கும் எண்ணையை ஊற்றி விளக்கு ஏற்றுதல் என்பது மிகவும் தவறான ஒன்று.

*கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.

*கணவன்-மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்பெண்ணை தீபம் உகந்தது.

* அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற ஆமணக்கு எண்ணை தீபம் ஏற்றலாம்.

* எள் எண்ணை (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களைத் திருப்தி செய்யவும் ஏற்றது.

*மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் சுத்தமான தேங்காய் எண்ணை கொண்டு தீபமேற்ற வேண்டும்.

*செல்வங்கள் அனைத்தையும் பெற விரும்புவோர் வேப்பெண்ணை, இலுப்பை எண்ணை, நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்றலாம்.

*மந்திர சித்தி பெற வேண்டுவோர் விளக் கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ஆகிய ஐந்து எண்ணைகளையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.

*கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் தீபம் ஏற்றக்கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.

தொகுப்பு: பிரியா மோகன்

You may also like

Leave a Comment

14 − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi